ஹரியானாவில் பைக் மீது கார் மோதி, 3 கி.மீ இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மோதலில் சிக்கிய பைக்கை 3 கி.மீ வரை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. பைக்கின் அருகே நின்று கொண்டிருந்த உரிமையாளர் சிறு இடைவெளியில் உயிர் தப்பினார்.
சாலையில் பயணித்தவர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது கார், பைக்கை 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. சிறிது நேரத்தில் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த பைக் வெளியே வந்து சாலையோரம் விழுந்ததை அடுத்து கார் ஓட்டுநர் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பைக் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு புகாரைப் பெற்றனர்.
அவர் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டுநருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஃபரிதாபாத்தில் வசிக்கும் சுஷாந்த் மேத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…