மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் மேலும் 339 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 339 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 14,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,57,450 ஆக உயர்ந்தது.
அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 339 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,698 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 9,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,70,8473 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,64,562 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025