பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தை குப்பை தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா எனும் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் இருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தையின் உடலை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், குழந்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இறந்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தை எந்த துணியாலும் மூடப்படாத நிலையில் இருந்ததாகவும், பசியின் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது இந்த புதிதாக பிறந்து குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதால் உயிரிழந்த குழந்தையின் தாயை அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களில் சோதனை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் மோதி நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…