புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள்….!!!

2018-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒருசில மணி நேரங்களே உள்ளது. நாளை 2019 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்தவ புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடுகள் இன்று இரவு 10-க்கு மேல் தொடங்குகிறது. இதற்காக ஆலயங்கள் மிக சிறந்த முறையில் அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண விளக்குகளால் ஆலயங்கள் ஜொலிக்கின்றன. இதற்காக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்கள் மட்டுமல்லாது, சில இந்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment