இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்

புத்தாண்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வீதிகளில் நடனம் ஆடியும் பாடல் பாடியும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டையொட்டி மும்பையில் உள்ள விக்டோரியா அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகளில் பலர் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனர். நாக்பூர், போபால் உள்ளிட்ட நகரங்களிலும், புத்தாண்டை வரவேற்ற மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment