சுல்தான் திரைப்படத்தின் புதிய அப்டேட்..!

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த படம் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு தமிழில் முதல் படமாகும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுல்தான் திரைப்படம் வெளியாகும் வெளியாகாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சுல்தான் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் எடிட்டிங் மற்றும் மீதமுள்ள பணிகளை முடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்த நிலையில், தற்பொழுது சுல்தான் திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்கி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை புகைப்படத்துடன் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.