கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது, விரைவில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்.
நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று கூறி வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரஷ்யா தரப்பில் கூறுகையில், நாம் சவுதி அரேபியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையைக் கையாள உள்ளோம். வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு Avifavir என்ற சிகிச்சை முறையைப் பயன்படுத்தும்போது அது நல்ல பலனை அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம்.
சவுதி அரேபியா இந்தப் புதிய சிகிச்சை முறையை இணைந்து சோதனை நடத்த ஆர்வமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவில் 4,05,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4,693 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவில் 85,261 பேர் பாதிக்கப்பட்டு, 503 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…