ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி..!

சிங்கப்பூரில் பிற நாட்டிலிருந்து வருபர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து பிரீதாலைசர் என்ற பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்த கருவி மூலம் கொரோனா ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியரும் அவரின் 3 மாணவர்களும் இணைந்து மூச்சுக்காற்று வழியாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய கருவியை கண்டுப்பிடித்து உள்ளனர். மேலும், இந்த கருவியை பயன்படுத்துபவர், இதில் உள்ள சிறிய குழாயை வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊத வேண்டும். பின்னர் மூச்சுக்காற்று உள்ளே சென்று காற்றில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் ஸ்பெக்ட்ரோமீட்டர் வழியாக தெரிவித்துவிடும்.

இதை, தயாரித்த இந்திய பேராசிரியரின் பெயர் டி வெங்கி வெங்கடேசன், மற்றும் அவருடைய 3 மாணவர்கள் டாக்டர் ஜியா ஹூனன், டு ஃபாங், வேனே வீ ஆகியோர் ப்ரீதாநிக்ஸ் நிறுவனத்தை தொடங்கி அதில் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.  மேலும், இந்த கருவியை வைத்து பரிசோதனை செய்ய சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், சிங்கப்பூருக்குள் மற்ற நாட்டிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையோடு சேர்த்து இந்த பிரீதாலைசர் பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

மேலும், இப்போது ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்வதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு கிடைக்கும். அதே நேரத்தில், ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலமாக கொரோனா பரிசோதனை செய்தால் முடிவு கிடைப்பதற்கு  சில மணிநேரங்கள் ஆகும். ஆனால், இந்த பிரீதாலைசர் கருவி ஒருவரின் மூச்சுக்காற்று வழியாக 1 நிமிடத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தரும்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

2 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

6 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago