திருச்சி அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..,

திருச்சி அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..,

திருச்சி:வரும் 24ம் தேதி முதல் திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஏப்ரல் 21ம் தேதி (நேற்று) மதியம் முதல் நாளை (23ம் தேதி) வரை திருச்சி அஞ்சலக கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலங்களில், திருச்சி தலைமை அஞ்சலக இரவு அஞ்சலகம் உட்பட எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யமுடியாது.அனைத்து தபால் அலுவலகங்களும் வழக்கம்போல மீண்டும் 24ம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தில்  இயங்கும்.  விரைவு தபால், பதிவு தபால் அனுப்ப விரும்புகிறவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் இயங்கும் திருச்சி ஆர்எம்எஸ் மற்றும் மத்திய பஸ்நிலையம் ரம்யாஸ் ஓட்டல் அருகில் உள்ள ஹெச்ஆர்ஓ அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *