புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது புகார் !

கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது, கேள்விகேட்ட செய்தியாளரிடம், நீ எந்த சாதி என கிருஷ்ணசாமி அவர்கள் கேட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், சென்னை மேற்கு மண்டல காவல் ஆணையர் விஜய்குமாரியிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், கிருஷ்ணசாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment