கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருவதால்,அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருகிறது.ஆனால்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லவே இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார்.
இந்த நிலையில்,உத்தரப் பிரதேசத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கையையும் குறைத்து காட்டும் முயற்சியில் முதல்வர் யோகி ஈடுபட்டுள்ளார் என்றும்,
அதனால்,மயானங்களில் எரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியே தெரியாமல் இருக்க சடலங்களை புகைப்படம் எடுப்பதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,சில வட இந்திய செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன.
அதன்படி,முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூரில்,பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்ட பேனர்களில்,”இங்கே சடலங்கள் அனைத்தும் இந்து சமய முறைகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.எனவே,சடலங்களை புகைப்படமோ மற்றும் வீடியோவோ எடுப்பது தண்டனைக்குரியக் குற்றம்” என எழுதப்பட்டிருக்கிறது.
இதனால்,உத்திரப்பிரதேசத்தில் கொரோனா மரணங்கள் குறித்த உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக உத்திரபிரதேச அரசு,மயானங்களில் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பது உறுதியாகியுள்ளது.
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…