கேரளாவில் புதிய உச்சம்..ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா.!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 416 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,710 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 3,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் திருவனந்தபுரத்தில் அதிகரித்து வருவதால் ஊரடங்கு  ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று முறை ஊரடங்கு விதிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.