அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தன.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்கடன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.இதன்மூலம்,37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மைக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு

மேலும்,நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரிலான விழிப்புணர்வு வாகனத்தையும் முதல்வர் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

 

Join our channel google news Youtube