கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியீடு…!

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியீடு. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 3-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வரின் நினைவிடத்திற்கு  சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்கள் அனைவரும் ஆடமபரமான நிகழ்வுகளில் ஈடுபடாமல், உங்களது வீடுகளிலேயே கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி பரியாதை செலுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சின்னமானது திமுக கொடியை இரண்டு பெண்கள் பிடித்துள்ளது போல அமைந்துள்ளது. மேலும் சின்னத்தில் ஒளிரும் சூரியனின் படமும் இடம்பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.