ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.அந்தவகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் அவர் பேசுகையில்,அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது.ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.