புதிய அபராத கட்டணம் ! விரைவில் அரசாணை வெளியீடு -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பான அரசாணை விரைவில்  வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம் அமலுக்கு வந்தது. குறிப்பாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் தமிழகத்தில்  மட்டும்  மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராத தொகை குறைத்து அரசாணை வெளியிடப்படும்.அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.