அரபிக்கடலில் உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….!

அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணத்தினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை குறையும். 

தென்தமிழகத்தில் கடந்த கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த சூழல் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணத்தினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை குறையும் என்றும் கன்னியாகுமரி லட்சதீவு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, நாகை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment