இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி – நேபாள நாட்டின் வெளியுறவு மந்திரி பிரதீப் கியாவாலி

மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாங்கி வருகிறது. அந்த வகையில், மலைப்பகுதியை முக்கியமாக கொண்டுள்ள அந்நாட்டில் இதுவரை 281 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர். 

இதில் 36 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர்  மட்டும் உயிரிழந்துள்ளார். தற்போது அந்நாட்டில் 244 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், இதுவரை இதுவரை 26,700 பேருக்கு அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா நேபாளத்திற்கு, 30 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளையும், 23 டன் மருந்து பொருட்களையும் நன்கொடையாக வழங்கி உள்ளது. இந்த நன்கொடையை, இந்திய தூதர் வினய் மோகன் சவாத்ரா, நேபாள சுகாதார மந்திரி பானுபக்த தக்காலிடம் நேரில் வழங்கினார். 

இதற்கு அந்நாட்டு அரசு தான் நன்றியை தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிரதீப் கியாவாலி தனது ட்வீட்டர் பாக்கத்தில், ‘மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.