ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!

ராமர் பற்றிய  பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார்.

நேபாள கவிஞர் பனுபக்தா தான், வால்மீகி எழுதிய ராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயத்தவர் ஆவர். பனுபக்தா, 1814ஆம் ஆண்டு பிறந்தார். 1868ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

நேபாள பிரதமரின் பேச்சு பல்வேரு சர்ச்சைகளை கிளப்பியது. அவரது பேச்சு நேபாளத்திலேயே பல்வேரு எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்நிலையில், பிரதமரின் பேச்சு குறித்து, நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ராமர் பற்றிய  பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை.

ராமர் மற்றும் அவரது பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு கதைகள் உள்ளன. ராமாயணத்தில் கலாச்சார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் குறித்து பிரதமர் பேசியுள்ளார் எனவும்,

ராமர் – சீதையின் திருமணத்தை கொண்டாட்ட விழாவானது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலமானது நடைபெறும். அதற்காக 2018ஆம் ஆண்டு ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்துகள் விடப்பட்டது எனவும், இத்தகைய செயல்கள் இரு நாட்டிற்கும் இடையேயுள்ள கலாசார பந்தத்தை குறிப்பிடும் வகையில் உள்ளது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

14 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

21 mins ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

60 mins ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

2 hours ago

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

2 hours ago