நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா..! வெகுவிமர்சையாக இந்நாளில்

நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும்  6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது.
இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும்  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும்  நடைபெறும்.இதில் தற்போது  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் அடுத்து நடைபெற வேண்டும் இதற்காக பிள்ளையார் திருவிழா கொண்டாட்ட நிகழ்வானது கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்ட திருவிழா வரும் 6ந்தேதி காலை 7.30 மணியளவில் 8.54 மணிக்குள் கொடியேற்ற நிகழ்வுடன்  தொடங்குகிறது.
author avatar
kavitha