நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.

நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதானவர்களுக்கு பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் புகார்தாரர் அருண்குமார், தாயார், தந்தை ஆஜரானார்கள். ஐஜி அளவில் உயர்மட்ட விசாரணை வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி சங்கரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்