நெல்லை கொலை வழக்கு !சிபிசிஐடிக்கு மாற்றம்

திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட  வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொல்லப்பட்ட  வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டுளள்து.