பிரதமராக இருந்தபோது நேருவுக்கும் திராவிடம் தேவைப்பட்டது – ஆ.ராசா

பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை.

ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை விட இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குகின்ற முயற்சியில் அன்றைக்கு ஈடுபட்டார்கள் என்பதை கால வரிசையில் சொல்லும்போது, பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் அன்று தேவைப்பட்டது என்பதை சொல்வதற்காக தான் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்