ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று (ஜனவரி 5-ஆம் தேதி ) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், புதிய பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்கிறார். கொரோனா விதிமுறை காரணமாக ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube