நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிடில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் ஏற்கனவே அழுத்தம் தந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த சூழலில் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…