நீட் தேர்வு: சட்ட போராட்டம் நடத்துவோம் – அமைச்சர் ரகுபதி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிடில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் ஏற்கனவே அழுத்தம் தந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்த சூழலில் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்