தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?! நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக சார்பில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.’

ஆனால் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.

இந்த விவரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ 2017 பிப்ரவரி மாதம் தமிழக அரசு சார்பில், நீட் விலக்கிற்காக 2 மசோதாக்கள் உள்துறை அமைச்சகத்திற்கு வந்திருந்ததாகவும், அதனை பரிசீலித்து, 2017 செப்டம்பர் 22ஆம் தேதி அந்த மசோதா தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும்’ தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுகவை சேர்ந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த விவகாரத்தில் உண்மை நிரூபித்தால் பதவி விலகுவதாக சவால் விடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.