நீட் நுழைவுத்தேர்வு – அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் நுழைவுத்தேர்வு – அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9 மணிக்குள்ளாக https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது. 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. ஏற்கனவே விண்ணப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்பட்டியிருந்த நிலையில், மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.