மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுவதாக சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.அதன,உறுதி செய்யும்விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (RIET) கல்லூரியில் நடந்த நீட் தேர்வு மையத்தில் இருந்து நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 லட்சம் பணம் மீட்கப்பட்டது.
ஆனால்,மறுபுறம் நம் தமிழகத்தில் நீட் தேர்வை மூன்றாவது முறையாக எதிர்கொள்ள மறுத்து தனுஷ் என்ற மாணவரும்,தேர்வு எழுதிய கனிமொழி மற்றும் சௌந்தர்யா என்ற இரு மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நீட் வினாத்தாளை கடத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்த அவலம் ஜெய்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுகின்றன. இந்த நீட் கொடுங்கோன்மையை நிறுத்த மாட்டோம் என இப்போதும் மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம்தானா?”,என்று பதிவிட்டுள்ளார்.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…