டெல்லியில் தீ விபத்து: சுமார் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பல்.!

டெல்லியில் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

தென்கிழக்கு டெல்லியின் குடிசை பகுதியில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சில மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் சுமார் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அரசாங்கம் சார்பில் தற்போது இழப்பீடு குறித்து மதிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில், துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் எங்களுக்கு வந்தது. அனைத்து காவல்துறை ஊழியர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் 1,000-1,200 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்