நாளை வெளியாகிறது நயன்தாராவின் நெற்றிக்கண்.!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நாளை மதியம் 12.15 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் அவள் படத்தை இயக்கியவர். இந்த  படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர், டிரைலர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது என்ற கூறலாம்.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படம் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெற்றிக்கண் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.