தேசிய நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது..!

அருணாச்சலப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அதன் தலைநகரமான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 59 கி.மீ. நீளம் கொண்டது. அண்மையில் கட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையானது அருணாச்சலப்பிரதேசத்தின் பண்டாரதேவாவில் தொடங்குகிறது. அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது.