நேஷனல் ஹெரால்ட் வழக்கு : மூன்றாவது நாளாக ஆஜரானார் சோனியா காந்தி..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான இன்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்றும் ஆஜராகும் படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் இன்றும் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார்.

நேற்று கடந்த வார விசாரணையின் போதும், நேற்று நடந்த விசாரணையின் போதும்  காங்கிரஸார் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இன்றும் காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment