தேசிய கொடி விவகாரம்: வழக்கை ரத்து செய்ய நடிகர் எஸ்.வி.சேகர் மனு தாக்கல்!

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். 

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய கொடியை அவமதிக்கவில்லை என்றும் களங்கமான தேசிய கொடியை தான் முதல்வர் ஏற்றப்போகிறாரா என்று மட்டுமே கேள்வி கேட்டேன் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 2020ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்