பொய் சொல்லி மக்களை ஏமாற்றியவர் நாராயணசாமி…! பிரதமர் மோடி விமர்சனம்…!

பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?

சமீபத்தில் புதுச்சேரி சென்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி,  சோலை நகர் பகுதியில் உள்ள கடலோர மக்களோடு உரையாற்றினார். அப்போது பேசிய மூதாட்டி  ஒருவர், மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது, புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி சந்தித்து, நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

ஆனால், புதுச்சேரி முதல்வர், அதை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்து கூறும் போது, மழை, புயலினால் பாதிக்கப்பட்ட போது சந்தித்து நிவாரணம் வழங்கியதாக ராகுல் காந்தியிடம் மாற்றி கூறினார். நாராயணசாமியின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில், பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நாராயணசாமியின் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, சொந்த கட்சி தலைவரிடம் நாராயணசாமி பொய் பேசியுள்ளார். தன் மக்களை ஏமாற்றியுள்ளார். பொய் கூறுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.