புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின் மேல் பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது. பின்னர் வீட்டிற்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய மின் சக்தி (solar system) மூலமாக தயாரிக்கப்படுகிறது.
மேலும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் சென்று தொழில் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொறியியல் பட்டதாரி அருண் பிரபு கூறிகிறார்.
தற்போது பொறியியல் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என கூறப்படும் வேலையில் ஆர்வத்துடன் கல்வி கற்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக இந்த ஆட்டோ வீடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…