காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் கொலை… பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது.!

காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் கொலை… பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது.!

தர்மபுரி மாவட்டதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

பஞ்சபள்ளி ஒட்டர்திண்ணை பகுதியில் வசித்து வந்தவர் விஜி இவரை ராஜேஸ்வரி என்ற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது, ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் என்பவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார், மேலும் இந்த நிலையில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி விஜியை ஊருக்கு அழைத்து வந்துள்ளார் .

மேலும் அதன் பிறகு விஜியின் உடல் காயங்களுடன் குன்னூர் சாலையில் மீட்கப்பட்டது , இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில் போலீசார் முனிராஜ் அவரது உறவினர்கள் சித்துராஜ் மகாலிங்கம் உட்பட 6 பேரை கைது செய்தனர் .

கைது செய்து விசாரணையில் தெரியவந்தது விஜியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருசக்கர வாகனம் மூலம் சென்று குன்னூர் சாலையில் வீசியது தெரிய வந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube