ரஷ்ய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அமெரிக்க மாணவி மர்ம மரணம்!

ரஷ்யாவில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேத்தரின் எனும் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 34 வயதுடைய கேத்தரின் எனும் அமெரிக்காவை சேர்ந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். கடந்த வியாழக்கிழமை இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கடைசியாக அந்த பெண்மணி தனது தாயாருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில் நான் கடத்தப்படவில்லை என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த செல்போனின் டவர் வைத்து விசாரித்த பொழுது மருத்துவமனைக்கு செல்வதற்காக சென்ற கார் காட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்மணியின் செல்போன் அழைப்பு காட்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 40 வயதுடைய நபர் ஒருவரை தற்பொழுது விசாரணைக்காக போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்மணி உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், என்ன நடந்துள்ளது என்பதை உன்னித்து கவனித்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal