அக்காவைக் கொன்று தலைமறைவான தம்பி கைது..!

தனக்குப் பிடிக்காதவரை காதலித்ததால் அக்காவை கொலை செய்த தம்பி கைது.

ராமநாதபுரத்தை சார்ந்த செல்வம் இவர் தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார்.

தான் மேலும் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த சுவாதியை அவரது தம்பி சரண்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுதொடர்பாக அவரின் தந்தை  அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து சரண்குமாரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், போலீசார்  சரண்குமாரை கைது செய்தனர்.

சுவாதி உறவுக்காரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு முதலில் மறுத்த பெற்றோர் பின்னர் சம்மதித்து உள்ளனர். சுவாதி காதலிக்கும் உறவுக்கார பையனை சரண்குமாருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை தனது அக்காவிடம் சரண்குமார் கூறிய நிலையில் சுவாதி தனது பேச்சை கேட்காததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan