அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என எலான் மஸ்க் பகிர் ட்வீட்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதுவும் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார்.
ஆனால், தன முடிவில் இருந்து பின்வாங்கினார் எலான் மஸ்க், ஏனெனில், ட்விட்டரில் 5% போலி கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அவரே தெரிவித்திருந்தார். இதனிடையே, தினமும் ஒரு ட்வீட்டை பதிவிட்டு வரும் எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அதாவது, அவரது பதிவில், கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் கருணைக் கட்சியாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் பிரிவினை மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டனர். அதனால் என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது, குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என தெரிவித்து, இப்போது, எனக்கு எதிரான அவர்களின் மோசமான தந்திரங்கள் வெளி வருவதைப் பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்திருந்தார். தற்போது, டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு தான் என் ஆதரவு என்று உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…