தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராக செயல்பட்டனர் – அமைச்சர் துரைமுருகன்

தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராக செயல்பட்டனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து அந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராக செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று பலரும் தெரிவித்தனர். எனக்கு எதிராக யார் யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனக்கு ஒட்டு போட வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்தவர்கள் யாரென்று தெரியும். அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.