அதிமுகவை காப்பாற்றுவேன்., பிப்.24ல் தீபம் ஏற்றுங்கள் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டறிக்கை.!

என் இல்லம் அம்மாவின் இல்லம் என்று நினைத்து மாலை 6மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு.

வரும் பிப் 24-ஆம் தேதி மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பிப் 24-ஆம் தேதி மக்களை கண்போல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்தநாள் அன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரதார்த்தனை செய்து, உறுதி மொழிகயை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்