நெஞ்சே உறைந்து விட்டது, என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை – அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!

நெஞ்சே உறைந்து விட்டது, என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை என திமுக எம்.எல்.ஏ மகன் அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் உயிரிழந்துள்ளனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டையின் திமுக எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்நிலையில், அவரும் அவரது மனைவியும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகனுக்கு அண்மையில் தொற்று ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே அவர் மாற்று திறனாளியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் அன்பழகனுக்கு தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் முற்றிலும் குணமானதை அடுத்து வீடு திரும்பியுள்ளன. இந்நிலையில் தொற்று பாதிப்பு உடல் நலத்தை மிகவும் குன்ற செய்ததால் அன்பழகன் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மா சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது என் நெஞ்சை உறைய வைத்து விட்டது எனவும், ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த அன்பழகனை சுப்பிரமணியனும் அவரது துணைவியாரும் கண்ணின் மணிபோல காத்து வந்ததை கொரோனா பறித்து சென்றுவிட்டதாகவும், அவர்களுக்கு  ஆறுதல் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ஊருக்கு ஒன்று என்றால் உடனே ஓடிப் போய் நிற்கக் கூடிய சுப்பிரமணியனுக்கு இப்படி ஒரு சோதனையா? தம்பி அன்பழகனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

27 mins ago

ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!

Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…

38 mins ago

நடு வானில் 2 மலேசியா ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து…10 பேர் உயிரிழப்பு!

Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…

59 mins ago

2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…

1 hour ago

பிரதமர் பதவியை வகிக்க மோடி தகுதியற்றவர் – செல்வப்பெருந்தகை

Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…

3 hours ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்.!

Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…

3 hours ago