காற்றை பாட்டிலில் அடைத்து ரூ.2,500-க்கு விற்பனை செய்யும் ‘MY BAGGAGE’ நிறுவனம்!

‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், வெளிநாட்டில் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான நேரங்களில், தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

இந்த நிறுவனம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது. கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்துக் கொண்டு, அதை அடைத்து வைத்து விற்பனை செய்கிறது.

500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலிலுள்ள காற்றின் விலை ரூ.2,500. இந்த நிறுவனத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்தால், அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து கொடுக்கிறது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகள் அந்த பாட்டிலை திறந்து காற்றை சுவாசித்து விட்டு அடைத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.