தமிழகம் முழுவதும் தேமுதிகாவின் 14-வந்து ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆனகாத்தூர் அம்மன் கோயில் திடலில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன் கலந்துகொள்ளவுள்ளார். இவருக்கு அரசியல் மேடை என்பது இது தான் முதல் முறை என்பதால் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது : தனது மகனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று தலைவர் விஜயகாந்த் விரும்புவதாக கூறியுள்ளார்கள்.