முருகன், நளினிக்கு வெளிநாட்டு உறவுகளுடன் பேச அனுமதி கிடையாது – தமிழக அரசு!

சிறையிலுள்ள முருகன் மற்றும் நளினிக்கு வெளிநாட்டு உறவினர்களுடன் பேச அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. 

author avatar
Rebekal