கொலை வழக்கில் தொடர்புடைய நபர் வெட்டிக்கொலை.!

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் மாதவன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் இவர் மீது காவல் நிலையத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது 30 வயதான இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில் கிட்டத்தட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ள வழக்கில் மாதவன் பெயரும் உள்ளது.

இந்நிலையில் மேலும் இந்த கொலையை தொடர்ந்து அதே போன்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரம்பாக்கம் காவல் நிலையபகுதியில் நடந்த கொலை வழக்கில் மாதவன் பெயரும் வழக்கில் உள்ளது நிலையில் அதில் மாதவன் கைது செய்யப்பட்டு கடந்த ஜூலை 27-ஆம் தேதி வெளிவந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையில் மாதவனின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் கிடந்தது இந்த கொலை சம்பவம் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மாதவன் உடலை கைப்பற்றினர் மேலும் மாதவனின் கை கால்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கிடந்தது மேலும் இதனை தொடர்ந்து போலீசார் மாதவனின் உடல் பாகங்களை சேகரித்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து இந்த கொலை எப்படி நடந்திருக்கலாம் என்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அப்பகுதியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.