என் காதலுக்கு நீ! தடை..கழுத்தை நெறித்து கணவன் கொலை.!மனைவி கைது

 கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த  கணவரை மனைவியும், கள்ளகாதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ராஜகுமார் வயது36 ஆகிறது.இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டத்தில் அவரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது தெரிய வரவே போலீசார் ராஜகுமாரின் மனைவி லாதாவின் (32) மீது சந்தேக ஏற்படவே அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மைகளை உளறியுள்ளார் லதா.விசாரணையில் லதா வழுதரெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தனக்கு கள்ளகாதல் இருந்தாகவும் இதற்கு தன் கணவன் தடையாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டதாக  லதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் போலீசார் லதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
kavitha