வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் கணவர்,உறவினர்கள் மீது கொலை வெறி தாக்குதல்.!

  • உள்ளாட்சி தேர்தலில் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார்.
  • நேற்று இரவு  பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் அமைந்து இருந்த கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோரை மர்ம கும்பல் தாக்குதல்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம்  திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு  பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர் .

அப்போது  3 கார்களில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 3 பேரையும் அரிவாள் மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில்  படுகாயம் அடைந்த 3 பேரும் முதலில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

author avatar
murugan