தல தோனியை புகழ்ந்து கூறிய முரளிதரன்.!

இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முரளிதரன் தல தோனியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம்.

இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் முந்திய காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேப்டன் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார் அதில் கூறியது தோனியின் கேப்டன்சயில் மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு பந்து வீச்சாளரையும் அவர் நம்புவார்.

எந்த ஒரு பந்துவீச்சாளர்களும் பீல்டிங் செட் செய்வதற்கு அனுமதி அளிப்பார் ஒருவேளை அந்த பில்டிங் சரியில்லை என்றால் நான் பில்டிங் மாற்றவா என அவர் கேட்டுவிட்டு மாற்றுவார் மேலும் சில நல்ல பந்தில் சிக்ஸர் பறக்கும் பொழுது சூப்பர் என்று கூறுவார் அதற்குப் பிறகு சிக்ஸர் போனது பெரிய விஷயம் இல்லை நீங்கள் வீசியது அருமையான பந்து அதனை சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு அவர் ஒரு சிறப்பான வீரர்என்றும் கூறுவார் என்று முரளிதரன் கூறியுள்ளார்.

மேலும் பேசிய முரளிதரன் கேப்டன்ஷிக்கு மிகவும் முக்கியமான விஷயம் நிதானமாக செயல்பட வேண்டும் அது தோனியிடம் அந்த பண்பு அதிகமாகவே உள்ளது, மேலும் தனது வயதிற்கு மேல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கீழுள்ள வீரர்கள் என அனைவருக்கும் அவர் மமதிப்பு அளிப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.